கொசு மருந்து தெளிக்க வேண்டும்

Update: 2024-09-01 18:08 GMT

தாரமங்கலம் நகராட்சிக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் உள்ள பொது கழிவறை மற்றும் சாக்கடை கால்வாய்களில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் சுகாதார வளாகத்தை பயன்படுத்தும் பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களுக்கு ஆளாகின்றனர். தற்போது பருவமழை காலம் நெருங்கி வரும் நிலையில் சுகாதார துறை அதிகாரிகள் உடனடியாக கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து கொசு மருந்து தெளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிருஷ்ணன், தாரமங்கலம்.

மேலும் செய்திகள்