நோய் பரவும் அபாயம்

Update: 2024-09-01 14:48 GMT
பெரம்பலூர் மதனகோபாலாபுரம் கம்பன் நகரில் ஏராளமான தெருக்கள் உள்ளத. இங்கு சில இடங்களில் மட்டும் புதிய தார்சாலை போடப்பட்டுள்ளது. ஒரு சில தெருக்களில் இன்னும் சாலைகள் குண்டும், குழியுமாகவே உள்ளன. இதனால் மழைக்காலங்களில் தெருக்களில் அதிகளவில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் தேங்கி மழைநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளை விரைந்து போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்