கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2024-08-25 17:49 GMT

பர்கூர்-கிருஷ்ணகிரி சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி எதிரில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சாக்கடை கால்வாய் சேதமடைந்தும், அடைப்பு ஏற்பட்டும், கழிவு நீர் சாலையோரம் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் தாமதம் இன்றி கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை தூர்வாரியும், சேதமடைந்த நிலையில் உள்ள கால்வாயை சீரமைத்தும் தர வேண்டும்.

-செந்தில், பர்கூர்.

மேலும் செய்திகள்