சுகாதார சீர்கேடு

Update: 2024-06-30 17:26 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சிக்கமாரண்டஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இந்த பகுதியில் கழிவுநீர் செல்ல வழியில்லாததால் சாலை ஓரத்தில் பள்ளம் தோண்டப்பட்டு குழாய் மூலம் கழிவுநீரை வெளியேற்றி வருகின்றனர். இதனால் சாலையோரம் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலன்கருதி சாக்கடை கால்வாய் அமைத்து தர வேண்டும்.

-மணி, சிக்கமாரண்டஅள்ளி.

மேலும் செய்திகள்