சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2024-06-16 18:04 GMT
  • whatsapp icon

மதுரை மாவட்டம் ஆனையூர் இந்திராநகர் பகுதிகளில் உள்ள சாக்கடையில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. கருப்பசாமி நகர் 2-வது தெருக்களிலும் சாக்கடைகள் பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் தெருக்கள் முழுவதும் சாக்கடை நீர் பரவுகிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாரவும், குப்பைகளை அகற்றவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்