தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2024-06-16 12:39 GMT

தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் திருப்பாலைத்துறையில் வடக்கு குடியானத்தெருவில் புதிதாக கழிவுநீர் வடிகால் உள்ளது. இந்த வடிகால் சிமெண்டு மூடிகளால் மூடப்படாமல் திறந்த நிலையில் இருக்கிறது. வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள வடிகாலில் கழிவுநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்