சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2024-06-09 16:24 GMT

தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் 4 வழி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் சாக்கடை கால்வாய் உள்ளது. தற்போது பெய்த மழைநீர், வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலையின் இருபுறமும் செல்லும் வகையில் இருந்து வந்தது. இந்த சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருப்பதால் புதர்மண்டியும், மண் நிரம்பியும் கிடக்கிறது. தொப்பூரில் உள்ள 4 வழி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள சாக்கடை கால்வாயினை தூர்வாரி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கண்ணன், தர்மபுரி.

மேலும் செய்திகள்