சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2024-06-09 16:18 GMT

ஆண்டிப்பட்டி பேரூராட்சி சக்கம்பட்டி 1-வது வார்டு பகுதியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் அருகே சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படவில்லை. இதனால் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் யாரும் சாலையில் நடந்து செல்ல முடியவில்லை. மேலும் துர்நாற்றம் வீசுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை விரைவாக தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்