சுகாதார சீர்கேடு

Update: 2024-06-02 17:50 GMT

பள்ளிபாளையம் பழைய போலீஸ் நிலையம் அருகே நடேஷ் செட்டியார் தெரு உள்ளது. தற்போது பஸ் நிலைய மேம்பால பணிகள் நடைபெறுவதால் அனைத்து இரு சக்கர, சரக்கு வாகனங்களும் இந்த சாலையை பயன்படுத்துகின்றன. இந்த பகுதியில் சாலையில் சாக்கடை கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தேங்கி நிற்பதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமம் அடைகின்றன. மேலும் இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கழிவுநீர் தேங்காத வகையில் கழிவுநீர் கால்வாயை சீர அமைத்து தர வேண்டும்.

-சர்வேஷ், பள்ளிபாளையம்.

மேலும் செய்திகள்