கழிவுநீர் வடிகால்களை சீரமைக்க வேண்டும்

Update: 2024-05-26 11:36 GMT
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் காலனி முதல் மெயின் ரோடு வரை சாலையில் இருபுறங்களிலும் உள்ள கழிவுநீர் வடிகால்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த கழிவுநீர் வடிகால்களை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்