சுகாதார சீர்கேடு

Update: 2024-05-26 10:29 GMT

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதி அண்ணலக்ரஹாரம் வீரமாமுனிவர் தெருவில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் குழாயை அப்பகுதியை சேர்ந்தவர்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் முறையான பராமரிப்பின்றி தற்போது குடிநீர் குழாய் அருகே கழிவுநீர் குளம் போல தேங்கி கிடக்கிறது. இதன்காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் குடிநீர் குழாயை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். மேலும், கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாய் அருகே கழிவுநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்