நோய் தொற்றும் அபாயம்

Update: 2024-05-19 16:20 GMT

எருமப்பட்டி தாலுகா ஜம்புமடை கிராமத்தில் சாலையில் பல நாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இந்த கழிவுநீரை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் தூய்மை பணியாளர்களிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. தேங்கி நிற்கும் கழிவுநீரில் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்களும் உற்பத்தியாகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சதீஷ், ஜம்புமடை.

மேலும் செய்திகள்