நோய் பரவும் அபாயம்?

Update: 2024-05-12 15:58 GMT

மோகனூர் தாலுகா வளையப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பகுதி உள்ளது. இந்தப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அது சரி செய்யப்பட்டது. அப்போது தோண்டப்பட்ட பள்ளம் தற்போது வரை மூடப்படாமல் உள்ளது. எனவே, தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளன. உடனடியாக அந்த பள்ளத்தை மணல் கொண்டு மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பிரபாகரன், குரும்பப்பட்டி.

மேலும் செய்திகள்