பஸ் நிறுத்தத்தில் தேங்கும் கழிவுநீர்

Update: 2024-05-12 14:02 GMT

கோவை பூ மார்க்கெட் பஸ் நிறுத்தத்தில் ஏராளமான பயணிகள் அரசு மற்றும் தனியார் பஸ்சுக்காக காத்திருக்கிறார்கள். தற்போது அந் த பஸ் நிறுத்தத்தில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மிகுந்த துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. அதனால் சாக்கடை கழிவுநீரை அகற்றி கழிவுநீர் தேங்காத வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்