கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2024-05-12 12:31 GMT

கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் அகற்றப்படுமா?

திருப்பூர் ராயபுரத்திலிருந்து காலேஜ் ரோட்டிற்கு செல்லும் ரெயில்வே ஒற்றைக்கண் பாலம் அருகே கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் சேகரமாகி உள்ளது. கழிவுநீர் கால்வாயில் அதிக அளவில் குப்பைகள் சேகரமாவதால் கழிவுநீர் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், தொற்றுநோய் பரவும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் தேங்கினால் அங்கு அருகில் உள்ள பொதுமக்களுக்கு கொசு தொல்லையும் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. உடனடியாக குப்பைகளை அகற்றி கழிவுநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகவேல்,ராயபுரம்.

9098787383

மேலும் செய்திகள்