புதர்மண்டிக்கிடக்கும் நொய்யல் ஆறு

Update: 2024-05-12 12:25 GMT

புதர்மண்டிக்கிடக்கும் நொய்யல் ஆறு

திருப்பூரில் பனியனுக்கு தொழிலுக்கு பிறகு மிகவும் சிறப்பு பெற்றது நொய்யல் ஆறு. இது திருப்பூர் மாநகரின் நடுவே பாய்கிறது. ஆண்டுதோறும் மழைக்காலம் தொடங்கும் முன் நொய்யல் ஆறு தூர்வாரப்படும். ஆனால் தற்போது அதற்கான பணி இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. இதனால் நொய்யல் ஆற்றில் குப்பைகள், செடி. கொடிகள் அதிக அளவில் ஆக்கிரமித்து தண்ணீர் சீராக செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. மழைக்காலம் தொடங்கும் முன்பு நொய்யல் ஆற்றை தூர்வாரி தண்ணீர் சீராக செல்ல மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்ணபிரான்,அவினாசி.

89766 37638

மேலும் செய்திகள்