சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2024-04-14 17:53 GMT

திருச்செங்கோடு தாலுகா சக்திநாயக்கன்பாளையம், மண்டகபாளையம், குமாரமங்கலம் ஆகிய 3 கிராமங்கள் ஊராட்சியின் சந்திப்பு பகுதியாக உள்ளது. இந்தப்பகுதியில் சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. முக்கிய இணைப்பு சாலையான இப்பகுதியில் சாக்கடை கழிவுநீரால் சுகாதார சீர் கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கழிவுநீர் தேங்காத வண்ணம் கால்வாய் அமைத்து சாலையை சீரமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

-விஷ்ணு, திருச்செங்கோடு.

மேலும் செய்திகள்