சேதம் அடைந்த கழிவுநீர் கால்வாய்

Update: 2024-04-14 17:41 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு வாணியர் தெருவில் நீண்ட நாட்களாக கழிவுநீர் கால்வாய் சேதம் அடைந்து உள்ளது. இந்த பகுதியில் குறுகிய வளைவு ஒன்று உள்ளது. இதில் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் இந்த பகுதியை கடக்கும் போது சாக்கடை கால்வாயில் விழும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் உள்ள சேதமடைந்த கழிவுநீர் கால்வாய் சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

-ராமநாதன், மாரண்டஅள்ளி.

மேலும் செய்திகள்