சாக்கடை கால்வாயை மூடலாமே...

Update: 2024-03-31 17:29 GMT

தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே கெண்டையனஅள்ளி அரசு பள்ளியின் நுழைவுவாயில் பகுதியில் திறந்தவெளியில் சாக்கடை கால்வாய் உள்ளது. நுழைவுவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாக்கடை கால்வாயால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுகள் தொல்லையும் உள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து சாக்கடை கால்வாயை சிலாப்புகள் கொண்டு மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜ், பெரும்பாலை.

மேலும் செய்திகள்