அபாய நிலையில் செப்டிக் டேங்க்

Update: 2024-03-31 17:27 GMT

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே மாதேமங்கலம் ஊராட்சி ஆவாரங்காட்டூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்குட்பட்ட பகுதியில் கழிவுநீர் செப்டிக் டேங்க் உள்ளது. இந்த செப்டிக் டேங்கின் மேற்பகுதி கான்கிரீட் சிலாப்புகள் உடைந்து அபாய நிலையில் உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் தவறி விழும் வாய்ப்பு உள்ளது. எனவே உடைந்த கான்கிரீட் சிலாப்புகளை சரி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சபரி, நல்லம்பள்ளி.

மேலும் செய்திகள்