கால்வாய் வசதி வேண்டும்

Update: 2024-03-31 10:45 GMT

நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட கருமத்தம்பட்டியில் குடியிருப்புகள், நிறுவனங்கள் பெருகி வருகின்றன. ஆனால், அங்குள்ள முக்கிய சாலையான அன்னூர் சாலையில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீரை முறையாக வெளியேற்ற முடியவில்லை. இதன் காரணமாக சாலையோரங்களில் கழிவுநீர் செல்வதை காண முடிகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே சாக்கடை கால்வாய் வசகதி ஏற்படுத்த தர அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்