கழிவுநீர் கால்வாய்க்கு மூடி அமைக்கலாமே

Update: 2024-03-24 17:31 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்குட்பட்ட பகுதி 10-வது வார்டு பஞ்சப்பள்ளி செல்லும் சாலையில் நீண்ட நாட்களாக திறந்த வெளியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இதில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த கழிவுநீர் கால்வாய் பற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக கழிவுநீர் கால்வாயின் மீது சிமெண்டு மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுந்தர், மாரண்டஅள்ளி.

மேலும் செய்திகள்