நோய் பரவும் அபாயம்

Update: 2024-03-17 18:04 GMT

சேலம் ஆண்டிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சித்தர்கோவில் பனங்காடு பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியானது நிறைவடையாமல் உள்ளது. மேலும் இந்த பணிக்காக சாலை ஓரத்தில் தோண்டப்பட்ட குழியில் கழிவுநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் நோய் பரவும் அபாயமும், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

-மேகலா, சேலம்.

மேலும் செய்திகள்