கழிவுநீர் வடிகால் மூடப்படுமா?

Update: 2024-03-17 14:53 GMT

தஞ்சை தெற்குவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சீரமைப்பு பணிகள் நடந்தது. அப்போது சாலையோரத்தில் இருந்த கழிவுநீர் வடிகால் சீரமைக்கப்பட்டு அதன் மேல் பகுதியில் சிமெண்டு கான்கிரீட் மூலம் மூடப்பட்டது. ஆனால் முழுமையாக மூடி அமைக்கப்படாமல் ஆங்காங்கே கழிவுநீர் வடிகால் திறந்த நிலையில் இருக்கிறது. குறிப்பாக தெற்குவீதியில் உள்ள பள்ளி அருகே கழிவுநீர் வடிகால் திறந்து கிடக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள கடைக்கு செல்பவர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விடுபட்ட பகுதிகளிலும் கான்கிரீட் மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்