தேங்கி நிற்கும் கழிவுநீா்

Update: 2024-03-10 14:53 GMT

வெள்ளாங்கோவில் பள்ளி மாரியம்மன் கோவில், திங்களூர் மெயின் ரோடு, சிறுவலூர் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பள்ளி மாரியம்மன் கோவில் வீதியில் தேங்கி நிற்கிறது. இதை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. பள்ளி மாரியம்மன் கோவில் வீதியில் பெரிய தொட்டி கட்டி அதில் கழிவு நீரை விட்டு, அதிலிருந்து மோட்டார் மூலம் வெளியேற்றி சாக்கடை வடிகாலில் விடும் பணி தொடங்கியது. ஆனால் அந்த பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. உடனே பணியை தொடங்கி வீதியில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்