புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2024-03-03 10:22 GMT

தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா நெடுவயல் அரசு மேல்நிலைப்பள்ளி, கோவில் முன்பாக கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக முகம்மது என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு கழிவுநீர் வெளியேறாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்