கால்வாயில் கலக்கும் கழிவுநீர்

Update: 2024-02-25 15:30 GMT

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வாணியாறு அணையில் இருந்து கால்வாய் வழியாக கடந்த வாரம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி, திரு.வி.க.நகர், தாலுகா அலுவலகம் அருகே உள்ள குடியிருப்பு வாசிகள் சிலர், தங்கள் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீரை குழாய் அமைத்து, பாசனத்திற்காகவும் குடிநீருக்காகவும் செல்லும் வாணியாறு கால்வாயில் விட்டு வருகின்றனர். குடிநீரோடு கழிவுநீர் கலப்பதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே கழிவுநீரை வாணியாறு கால்வாயில் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கலக்காத வண்ணம் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ராஜா, பாப்பிரெட்டிப்பட்டி.

மேலும் செய்திகள்