சாயக்கழிவுநீர் ஆற்றில் கலப்பு

Update: 2024-02-18 17:23 GMT

பள்ளிபாளையம் ஆவத்திபாளையம் ராமகிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள கால்வாயில் சாயக்கழிவுநீர் இரவு நேரங்களில் திறந்து விடப்படுகிறது. இதனால் கால்வாயில் நுரை பொங்குவதுடன், தூர்நாற்றம் வீசுகிறது. மேலும் இந்த சாய கழிவுநீர் நேரடியாக காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த நீரைதான் மக்கள் பயன்படுத்துகின்றனர். எனவே சாய கழிவுநீர் கால்வாயில் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆதவன், ஆவத்திபாளையம்.

மேலும் செய்திகள்