தூர்வார வேண்டிய சாக்கடை கால்வாய்

Update: 2024-02-04 18:09 GMT

சேலம் 8-வது வார்டு காமராஜர்நகர் 2-கிராசிங்கில் சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. துப்புரவு பணியாளர்கள் சாக்கடை கால்வாய்யை சுத்தம் செய்வது இல்லை. இந்த தெருவில் இடிக்கப்பட்ட வீடுகளின் கற்கள் சாக்கடையோரம் கொட்டப்பட்டு வருட கணக்கில் தேங்கி உள்ளதால் பாம்புகள், விஷப்பூச்சிகள் நடமாட்டம் இந்த தெருவில் அதிகமாக உள்ளன. எனவே பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வர அச்சப்படுகின்றனர். இதை துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-வேலுசாமி, அஸ்தம்பட்டி.

மேலும் செய்திகள்