சுரங்கப்பாதையில் சுகாதார சீர்கேடு

Update: 2024-02-04 17:13 GMT

தர்மபுரி- பென்னாகரம் சாலையில் குமாரசாமிப்பேட்டை பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. இதன் பக்கவாட்டு பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தண்டவாளத்தின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை பராமரிப்பின்றி புதர்மண்டி காணப்படுகிறது. இதில் மழைநீரும் நீண்ட நாட்கள் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இந்த சுரங்கப்பாதையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை தொடர்கிறது. எனவே சுரங்கப்பாதையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்