தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-01-28 11:53 GMT

திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெரு உள்ள ஒரு தனியார் கட்டிடத்தின் பின்புறம் கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது. இந்த கழிவுநீர் வாய்க்கால் கடந்த பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளதால் தற்போது தூர்ந்துபோன நிலையில் பிளாஸ்டிக் கழிவுகளுடன் தேங்கி நிற்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழி இன்றி தேங்கி நிற்பதால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாய்க்காலை முறையாக தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்