கால்வாயில் அடைப்பு

Update: 2023-12-31 10:34 GMT

கோவை சங்கனூர் ரோடு நல்லாம்பாளையம் சிவளபுரி அம்மன் நகரில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது கால்வாயில் செல்ல முடியாத வகையில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கேயே கழிவுநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி வருகிறது. இதன் காரணமாக தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த கால்வாயில் ஏற்பட்டு உள்ள அடைப்பை சரி செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்