நிரம்பி வழியும் கழிவுநீர் கால்வாய்

Update: 2023-12-24 16:59 GMT

நிரம்பி வழியும் கழிவுநீர் கால்வாய்

திருப்பூர் பல்லடம் ரோடு காட்டன் மார்க்கெட் அருகில் இருந்து தென்னம்பாளையம் வரை ரோட்டோரம் இருக்கும் கழிவுநீர் கால்வாய் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த கால்வாயில் குப்பை மற்றும் மண் தேங்கி கிடப்பதால் கழிவுநீர் பாய்ந்து செல்வதற்கு வழியின்றி தேங்கி நிற்கிறது. மேலும் அவ்வப்போது ரோட்டில் நிரம்பி பாய்கிறது. இதனால் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும், இப்பகுதியில் உள்ள கடைகள், வங்கி மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இருப்பவர்களுக்கும் பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. நீண்ட நாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசி வருவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இங்கு கால்வாயில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி, கால்வாயை தூர்வார வேண்டும்.

-----

பிரபு,திருப்பூர்.


98417 87563

மேலும் செய்திகள்