தேங்கும் கழிவுநீர்

Update: 2023-12-24 12:49 GMT

பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி 7-வது வார்டு சக்தி விநாயகர் நகரில் கழிவுநீர் செல்ல வழி இல்லை. இதனால் அங்கு சாலையோரத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் அவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே அங்கு சாக்கடை கால்வாய் வசதியை மேம்படுத்தி தர வேண்டும். 

மேலும் செய்திகள்