கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்படுமா?

Update: 2023-12-17 17:01 GMT

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா கோவிலூர் கிராமத்தில் கீழ் வீதியில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் தற்போது சேதமடைந்து உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த கழிவுநீர் கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்