சாலையில் தேங்கும் கழிவு நீர்

Update: 2023-11-19 13:06 GMT
கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து காசிம் வயல் பகுதிக்குச் செல்லும் சாலையில் சில ஆண்டுகளாக கழிவுநீர் தேங்கி காணப்படுகிறது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அருகே உள்ள கட்டிடத்தில் இருந்து கழிவு நீர் வெளியேறுவதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர் எனவே சாலையில் தேங்கும் கழிவு நீரை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அலி, கூடலூர்

மேலும் செய்திகள்