சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-10-29 17:10 GMT

அனுமந்தன்பட்டி பேரூராட்சி 9-வது வார்டு பகுதியில் மழைக்காலங்களில் சாலையில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. சாலையில் கழிவுநீர் தேங்குவதால் அந்த வழியாக வரும் பொதுமக்கள் வேறு வழியாக சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மழைக்காலங்களில் கழிவுநீர் சாலையில் தேங்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்