சுகாதார சீர்கேடு

Update: 2023-10-29 11:54 GMT

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தாராசுரம் எலுமிச்சங்காபாளையம் பாரதி நகர் 2,3-வது தெருவில் கழிவுநீர் வடிகால் உள்ளது. இந்த வடிகாலில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அரசல் ஆற்றில் கலக்கிறது. இதனால் நீர் மாசடைகிறது. மேலும், வடிகாலிலும் செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடப்பதால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகாலை சுத்தம் செய்யவும், ஆற்றில் கழிவுநீர் கலக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்