தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால்

Update: 2023-10-29 11:41 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், சித்தளி ஊராட்சி பீல்வாடி கிராமத்தில் கழிவுநீர் செல்லும் வாய்கால் சுத்தம் செய்யாமல் இருந்ததால் தற்போது பெய்த மழையில் கழிவுநீர் வாய்க்கால் நிரம்பி குடியிருப்பு பகுதிகளுக்குள் கழிவுநீர் புகுந்தது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, கழிவுநீர் வாய்க்காலை தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்