திறந்து கிடக்கும் கால்வாய்

Update: 2023-10-29 10:15 GMT

கோவை சிங்காநல்லூர் பஸ் நிலைய பகுதியில் கழிவுநீர் கால்வாய் சரிவர மூடப்படாமல் உள்ளது. அதில் உள்ள மூடி பாதி அளவில் திறந்த நிலையில் காட்சி அளிக்கிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி வருகிறது. இதனால் பஸ் நிலையத்துக்கு வந்து செல்லும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. மேலும் அவர்கள் தவறி விழவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே அந்த கால்வாயை சரியாக மூடி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்