கழிவுநீர் அகற்றப்படுமா?

Update: 2023-10-22 13:51 GMT

காஞ்சிபுரம் மாவட்டம், 13-வது வார்டுக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் பாரதி நகரில், கற்கீஸ்வரர் ஆலயத்தின் அருகே உள்ள சாலையில் கழிவுநீர் நீண்ட நாட்களாக வழிந்து ஓடுகிறது. இதனால் அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் சுகாதார கேடால் நோய்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்