திறந்த நிலையில் கழிவுநீர் வடிகால்

Update: 2023-10-22 10:05 GMT
திறந்த நிலையில் கழிவுநீர் வடிகால்
  • whatsapp icon

தஞ்சை மாநகராட்சி 13-வது வார்டு காவேரி நகர் சாலையோரத்தில் கழிவுநீர் வடிகால் உள்ளது. இந்த வடிகால் மூடியின்றி காணப்படுவதால் குப்பைகள் குவிந்து கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை மூடியபடி சென்று வருகின்றனர். மேலும், தேங்கி கிடக்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகாலில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்றவும், வடிகாலுக்கு மூடி அமைத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்



மேலும் செய்திகள்