கடும் துர்நாற்றம்

Update: 2023-10-15 10:14 GMT

கோவை சாய்பாபா காலனி 44-வது வார்டு அண்ணா நகரில் நீண்ட நாட்களாக சாக்கடை கால்வாயை தூர்வாரும் பணி நடைபெறவில்லை. மேலும் ஏற்கனவே சாக்கடையில் இருந்து எடுக்கப்பட்டு குவித்து வைக்கப்பட்டு உள்ள மண் உள்பட கழிவுகள் இன்னும் அகற்றப்படவில்லை. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் இனிமேலாவது உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்