கால்வாயில் அடைப்பு

Update: 2023-10-08 13:32 GMT

கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்கு செல்லும் சாலையோரத்தில் வலதுபுறம் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து, கழிவுநீர் கால்வாயில் அடைப்பை நீக்க வேண்டும்.

மேலும் செய்திகள்