தாமதமாகும் கழிவுநீர் கால்வாய் பணி

Update: 2023-10-01 17:09 GMT

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட தட்டார தெருவில் கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணி தாமதமாக நடந்து வருகிறது. இதனால் அங்குள்ள வணிக நிறுவனத்தினர் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் குழி தோண்டும் போது, தொலைபேசி வயர்களை பணியாளர்கள் துண்டித்து விடுவதால், தொலைபேசி இணைப்பு கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இந்த கழிவுநீர் கால்வாயை சீரமைக்கும் பணியை விரைந்து முடிப்பார்களா?

மேலும் செய்திகள்