தடுப்புச்சுவர் தேவை

Update: 2023-10-01 11:40 GMT

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அசூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட காமராஜ்நகர் 3-ம் தெரு பெரிய பூண்டிஆயி அம்மன்கோவில் அருகே சாலையோரத்தில் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் தடுப்புச்சுவர் கட்டப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் பள்ளத்தில் தவறி விழுந்து விடுகின்றனர். மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள கால்வாயில் தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்