சுகாதார சீர்கேடு

Update: 2023-09-27 12:11 GMT
நாமக்கல் - மோகனூர் சாலையில் ஆசிரியர் குடியிருப்பு உள்ளது. இந்த பஸ்நிறுத்தம் அருகே விநாயகர் கோவில் ஒன்றும் உள்ளது. இதன் அருகில் சாலையோரத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் கொசு தொல்லையும் அதிகரித்து உள்ளது. எனவே கழிவுநீர் தேங்குவதை தடுக்க நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்