கொசுத்தொல்லை

Update: 2023-06-21 09:29 GMT

கோவை கவுண்டம்பாளையம் மவுகம் நகரில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி, அவற்றின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். ேமலும் அவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சாக்கடை கால்வாயில் ஏற்பட்டு உள்ள அடைப்பை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்