பாராட்டு

Update: 2022-07-23 13:17 GMT

அந்தியூர் அருகே உள்ள புதுமேட்டூர் கிராமத்தில் 50 மீட்டர் தூரத்துக்கு சாக்கடை வடிகால் அமைக்க குழி தோண்டப்பட்டது. சாக்கடை வடிகால் அமைக்காததால் கழிவுநீர் தேங்கி அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதுபற்றிய செய்தி 'தினத்தந்தி' நாளிதழின் புகார் பெட்டி பகுதியில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து புதுக்காட்டூர் பகுதியில் சாக்கடை வடிகால் அமைக்கப்பட்டது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்