தூர்வாரப்படுமா?

Update: 2023-01-18 06:09 GMT


ஈரோடு கருங்கல்பாளையம் ஜானகியம்மாள் லே-அவுட் மற்றும் சகன் வீதியில் சாக்கடை கால்வாய் கடந்த பல மாதங்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி உள்ளது. இதன் காரணமாக கொசு தொல்லை அதிகமாகி உள்ளது. மேலும் அந்த பகுதியில் பலருக்கு காய்ச்சல், இருமல் போன்ற நோய்களும் ஏற்பட்டு உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்